Followers

Sunday, August 21, 2011

தமிழர்களின் என்ணறிவு: பில்லியனுக்கும் மேல் தெரியுமா ?



        நம்மில் பலருக்கு கோடி, மில்லியன், பில்லியன் அதற்கு மேல் தெரியாது. ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அனந்தம்

Friday, August 19, 2011

நனையாத உன் மடல்





                     குளிர்ந்த காற்று

                     நெகிழ்ந்த மேகம்

                     பொழிந்த தூறல்

                     சில்லிட்ட சாரல்

                     எதுவும் என்னைக் கவரவில்லை
          

Sunday, August 14, 2011

கணிதப்புதிர்கள் - புதிரை விடுவிப்பீர்களா ....?






1) கட்டியால் எட்டு கட்டி
    காலரை முக்கால் கட்டி
      செட்டியார் இறந்து போனார்
         சிறுபிள்ளை மூன்று பேர்
            கட்டியை உடைக்காமல்
                 கணக்காய் பிரித்திடுக...

Saturday, August 13, 2011

என் பிரியமான மகளே...




      
                    ன்னுடன் பிணக்குக்கொண்டு
                    பேசாதிருக்கும்
               என் பிரிய மகளே ....

Thursday, August 11, 2011

கணிதப்புதிர்கள் - விடைகள் (வழிமுறையுடன்)





1) ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி
?

கடிகாரம் 5 முறை மணியடிக்க 12 வினாடி. எனவே 1 க்கும் 5 க்கும்  இடையில் 4 இடைவெளி உள்ளது. 4x3=12. ஒரு இடைவெளிக்கு 3 வினாடி. 1 க்கும் 10 க்கும் இடையில் 9 இடைவெளி உள்ளது. எனவே 10 முறை மணியடிக்க 9x3=27 வினாடி.


2) ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?

Sunday, August 7, 2011

கணிதப்புதிர்கள் - முடிந்தால் விடை கூறுங்கள்





1) ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி?

27 விண்மீன்களின் தமிழ்ப்பெயர்கள்





                 
             கோள் என்பது, ஒன்றிலிருந்து ஒன்றை வாங்கி அடுத்தவருக்குத் தருவது என்ற பொருளில்தான் கோள் சொல்லுதல், கோள் மூட்டுதல் என்ற சொற்கள் வழக்கில் உள்ளது. ஒருவர் செய்தியை மற்றவருக்குத் தெரிவிப்பதே கோள் சொல்லுதல் எனப்படும். ஒன்றிலிருந்து ஒன்றைக் கொண்டு (ஒளியை) அதன் மூலம் வினையாற்றும் பொருளே கோள் எனப்பட்டது. கோள்கள் அனைத்தும் கதிரவனின் ஒளியைப் பெற்று உலகிற்கு எதிரொலிக்கின்றன.

Thursday, August 4, 2011

புத்தகம் உருவான வரலாறு






      நாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyrus) ரோல்களில்தான் எழுதப்பட்டு வந்தது. இது மிகவும் நீண்ட அளவிலான ரோல்களாகவும் இருந்தது. ரோமானியர்கள் இதனை வால்யுமின் (Valumen) என்றழைத்தனர். இதுவே பிறகு நாம் இன்று உபயோகிக்கும் வால்யூம் (Valume) என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது.

Wednesday, August 3, 2011

மோனலிசா புன்னகையின் மர்மம்





மோனலிசாவின் புன்னகை மர்மமானது. கடந்த 500 ஆண்டுகளாக இந்த புன்னகையின் மர்மம புரியாத புதிராக இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சி 1500 களில் வரைந்த அற்புத ஓவியம்தான் மோனலிசா.

Monday, August 1, 2011

சூரியனுக்கு 55 பெயர்கள்





சூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை மாலையில் சிவப்பாகவும் தெரிவதன் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகும். G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமா5,500°c ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறமாக இருக்கிறது.