உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதாவின் நலம் விரும்பி தமிழகம் முழுக்க, வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் கடந்த மூன்று வாரங்களாகவே நடந்து வருகின்றன. இந்நிலையில்,
சொத்துக்
குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர்
முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.