Followers

Showing posts with label வரலாற்றாய்வு. Show all posts
Showing posts with label வரலாற்றாய்வு. Show all posts

Sunday, July 31, 2011

பாண்டியனாக மாறிய சிவன்





சிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.

Tuesday, May 31, 2011

காத்து... கருப்பு....



           மக்களுக்கு இன்று வரை பேய் பிசாசுகள் பற்றி பயம் இருக்கத்தான் செய்கிறது. இன்று கூட இரவு நேரத்தில்  வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் பொது, இப்போது வேண்டாம்; காத்து கருப்பு அடித்து விடும்; விடிந்த பின் போகலாம் என்பார்கள். 

Sunday, May 15, 2011

வைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை


இராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற இரு பிரிவுகள் தோன்றின. வேங்கட நாதர் என்ற வேதாந்த தேசிகர் என்பார் காஞ்சிபுரத்திற்கு அருகில் துப்பில் எனும் கிராமத்தில் பிறந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இவர் வைணவர்களிடையே வடகலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார். ஏறத்தாழ அதே காலக்கட்டத்தில் ஆழ்வார் திருநகரியில் தோன்றிய மணவாள மகாமுனி என்பார் தென்கலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார்.

Monday, December 27, 2010

* சிவன் - ஓர் ஆய்வு


   
          உலகின் ஆதி காலத்தில் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டனர் என்பதை நாமறிவோம். அம்மக்கள் மரங்களிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் நாமறிவோம். இரவு காலத்தில்   பயத்தின் காரணமாக, எப்போது விடியும் என்று காத்திருந்தனர்.

Sunday, December 26, 2010

* உலகில் சக்கரத்தை முதலில் கண்டுப்பிடிதவர்கள் தமிழர்களே....


         உலகின் முதல் அறிவியல் வளர்ச்சியின் தொடக்கம் மனிதன், சக்கரத்தை கண்டுபிடித்ததே என்பது ஆய்வாளரின் கருத்து. சக்கரத்தைக் கண்டுபிடித்த இனம் யாவர் என்பது இது வரை உறுதி செய்யவில்லை. சக்கரம் என்ற பொருளில் சொல்லப்படும் பன்மொழிகளின் சொற்கள் தமிழின் மூலத்தையே கொண்டுள்ளன என்பதால் சக்கரத்தைக் கண்டுபிடித்தவன் தமிழனே என்று உறுதியாக கூறலாம்.