Followers

Monday, August 1, 2011

சூரியனுக்கு 55 பெயர்கள்





சூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை மாலையில் சிவப்பாகவும் தெரிவதன் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகும். G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமா5,500°c ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறமாக இருக்கிறது. 

Sunday, July 31, 2011

பாண்டியனாக மாறிய சிவன்





சிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.

விருதுகளும் பரிசுகளும்



1) நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்   -  இரவீந்திரநாத் தாகூர்



2) மகசாசே விருது பெற்ற முதல் இந்தியர்  -  ஆசார்யா வினோபா பாவே

Thursday, July 14, 2011

தமிழ்நாட்டின் சிறப்புகள்


1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில்     - தூத்துக்குடி

Thursday, June 16, 2011

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்


      கணிதம் உலகை மட்டுமல்ல அனைவரின் உள்ளதையும் ஆளும். ஈடுபாடு ஒன்று போதும். ஈடுபட்டால் கணிதமே உலகமாகும்.

      தமிழர் என்ற வகையிலே நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அதில் கணிதத்தைப் பொறுத்த மட்டில்,

Saturday, June 11, 2011

முரண்பாடு



               அறியாமல் பிழை செய்திருந்தால்

               அடியேனை மன்னித்தருள்க.....

Friday, June 10, 2011

வட்டத்தின் பரப்பளவை முதலில் கண்டவர்கள் தமிழர்கள்



கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான பரப்பளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான பரப்பளவை காக்கைப்பாடினியம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த காக்கைப்பாடினியார். (தொல்காப்பியர் காலம் எனபது கி.மு.711 ஆகும்.) இவர் எழுதிய அற்புதமான கணித நூல் “ காக்கைப்பாடினியம் ஆகும். இதில் வட்டதிற்கான பரப்பளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

Wednesday, June 8, 2011

எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - II



    கணிதத்தில் எண்களைப் பற்றி ஆராய்ந்தால் நாம் நம்மை அறியாமலேயே காற்றை மறந்து கணிதத்தை சுவாசிக்கக் கற்றுக்கொள்வோம். காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், கன்னியை மட்டுமல்ல: கணிதத்தையும்தான். கணிதத்தில் ஆய்வை மேற்கொண்டவர்களுக்கு கடிகாரம் தேவையில்லை.  ஏனென்றால் காலம் அவர்களை கடந்து செல்லவில்லை. அவர்கள்தான் காலத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியென்ன, கணிதத்தின் மேல் தீரா காதல், கீழ்கண்ட எண் தொடர்களை பாருங்கள். நீங்களும் கணிதத்தின் மேல் காதல் வயப்படுவீர்.


Tuesday, June 7, 2011

எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - I


"கணிதம் என்பது அறிவியலின் ராணி
 
எண் கணிதம்  என்பது கணிதத்தின் ராணி. "  - கார்ல் கௌஸ்
 

           
ஆம், எண்களில் ஒரு மாயை, ஒரு சக்தி, ஒரு விந்தை இருக்கிறது.  விந்தையான  பல எண்கள்  உள்ளன.  வியப்பூட்டும் அவ்வெண்களில் சிலவற்றை இங்கு ஈண்டு காண்போம்.

TYPE : 1
                      A!+B!+C! = ABC  என்ற வகையில் அமைந்த எண்கள்.
1,2,145,40585 ஆகிய எண்களை மட்டுமே அதன்  பேக்டோரியல்  எண்களின் கூடுதலாக எழுத முடியும்.

1) 145
      1! +4! + 5! = 1 + 24 + 120  = 145

Tuesday, May 31, 2011

காத்து... கருப்பு....



           மக்களுக்கு இன்று வரை பேய் பிசாசுகள் பற்றி பயம் இருக்கத்தான் செய்கிறது. இன்று கூட இரவு நேரத்தில்  வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் பொது, இப்போது வேண்டாம்; காத்து கருப்பு அடித்து விடும்; விடிந்த பின் போகலாம் என்பார்கள்.