Followers

Sunday, January 3, 2016

தனித்தன்மையை இழந்த தமிழர்கள்



முக்கழகம் அமைத்து தமிழ் வளர்த்தோம். தமிழால் வளர்ந்தோம். கடல்கோளிற்கு முற்பட்ட தமிழ்நாடு, மிகப்பெரும் நாடு. ஆனால் இன்று கடைக்கோடியில் ஒரு சிறு மாநிலம். அன்று முதல் இன்று வரை சிறிது சிறிதாக நம்  தனித்தன்மையை இழந்து வருகிறோம். ஏன்?

Tuesday, July 28, 2015

இரங்கற்பா - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்








தடுமாறி விழுந்தது
தரையில் சூரியன்...!
தடம் மாறிப்போனது
தரணி முழுவதும்...!


வேரறுந்த மரமாய்
வீழ்ந்துதான் போனோம்...
காம்பறுந்த மலராய்
கதறித்தான் போனோம்....


கானல் நீரானாய்....
கண்களில் கடலானோம்!
காணவே முடியாமல்
காட்சிப் பிணமானோம்....!


அக்னிச் சிறகினில்
அகிலத்தைச் சுற்றினாய்....!
அக்னிதான் வேகுமோ...!
அகிலம்தான் தாங்குமோ...!


புவிநாடுகள் மிரண்ட
பொக்ரான் அணுகுண்டே...!
பொல்லாத அணுகுண்டாய்
சொல்லாமல் போனாயோ....!


இறப்பிற்கு இறப்பில்லையோ...
இதயத்திற்கு இதயமில்லையோ...
இயற்கைதான் விதிமுறை
இதுவரை மீறவில்லையோ...


ஆறுகளாய் இருந்திருந்தால்
ஆழியிடத்தில் செல்லலாம்....!
ஆறுதலுக்கும் வழியில்லை
யாரிடத்தில் செல்வோம்....!

               - சி.முத்தரசன்.

Friday, May 22, 2015

உடலுக்கு சத்தானது பச்சைக்காய்கறிகளா? சமைத்த காய்கறிகளா?

 
        


        காய்கறிகளை சமைத்துச் சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துக்கள் அழிந்து விடும் என்று பொதுவாக நாம் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில் அப்படி நிகழ்வதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Saturday, December 27, 2014

தமிழரின் பழமையின் புதுமை... நீட்டலளவையில் நீண்ட சரித்திரம்...





நமது தமிழ் பழம்பெருமை மிக்க மொழி. மூவாயிரம் ஆண்டுகள் அல்ல, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழிதான் நம் தமிழ் மொழி. இது தற்போதைய அகழ்வாராய்ச்சி மூலம் இங்கிலாந்து அறிஞர்கள் கூறியது.