Tuesday, October 20, 2020
Monday, September 28, 2020
Sunday, January 3, 2016
Tuesday, July 28, 2015
இரங்கற்பா - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தடுமாறி விழுந்தது
தரையில் சூரியன்...!
தடம் மாறிப்போனது
தரணி முழுவதும்...!
வேரறுந்த மரமாய்
வீழ்ந்துதான் போனோம்...
காம்பறுந்த மலராய்
கதறித்தான் போனோம்....
கானல் நீரானாய்....
கண்களில் கடலானோம்!
காணவே முடியாமல்
காட்சிப் பிணமானோம்....!
அக்னிச் சிறகினில்
அகிலத்தைச் சுற்றினாய்....!
அக்னிதான் வேகுமோ...!
அகிலம்தான் தாங்குமோ...!
புவிநாடுகள் மிரண்ட
பொக்ரான் அணுகுண்டே...!
பொல்லாத அணுகுண்டாய்
சொல்லாமல் போனாயோ....!
இறப்பிற்கு இறப்பில்லையோ...
இதயத்திற்கு இதயமில்லையோ...
இயற்கைதான் விதிமுறை
இதுவரை மீறவில்லையோ...
ஆறுகளாய் இருந்திருந்தால்
ஆழியிடத்தில் செல்லலாம்....!
ஆறுதலுக்கும் வழியில்லை
யாரிடத்தில் செல்வோம்....!
- சி.முத்தரசன்.
Friday, May 22, 2015
Saturday, December 27, 2014
Sunday, October 19, 2014
ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து - கடிதம் இணைப்பு
Saturday, October 4, 2014
Subscribe to:
Posts (Atom)





