Followers

Wednesday, December 28, 2011

கணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு




கணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் தோழன். ஆம்! உலகம் போற்றும் கணிதத் தலைவன் ராமனுஜன். தமிழகத்தில் பிறந்து உலகினில் உயர்ந்த கணித மாமேதை. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பாரத பிரதமர் வரும் புத்தாண்டை (2012) கணித ஆண்டாக அறிவித்தார். இது ராமானுஜரால் கணிதத்திற்கு கிடைத்த பெருமை.

Wednesday, October 12, 2011

முடிந்தால் பதில் சொல்லுங்கள் ...!






     நாங்கள் இரவு - மின்வெட்டு நேரத்தில் விடுகதையிட்டு விளையாடிக்கொண்டு இருந்தோம். அச்சமயம் எங்களைக் கடந்து சென்ற ஒரு பாட்டி எங்களிடம் விடுத்த விடுகதை இது. விடை சொல்லுங்கள் பார்ப்போம். 

1) ஆதி காலத்தில்

அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில்
வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும்
கட்டுப்பட்டவள்....

Monday, October 10, 2011

இப்படியும் சொல்லலாம்...





அதிகாரி :
     நாம் எப்போதாவது தாமதமாகப் போனால் முன்னாடியே வருபவர்; நாம் சீக்கிரமாகப் போனால் தாமதமாக வருபவர்.


அணுகுண்டு :
     கண்டுபிடிப்புகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கண்டுபிடிப்பு.


Sunday, October 9, 2011

இராமானுசன் எண்கள்






       கணித உலகின் கடைசி சக்ரவர்த்தி, கணிதத்தோடு இரண்டற கலந்த மாமேதை, திரு. இராமனுசனார் அவர்கள் கணிதத்திற்கு ஆற்றிய தொண்டினை என்னென்று சொல்வது. கணிதத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டியவர். கணிதத்தில் ஒரு புது எண் வரிசையைக் கண்டறிந்தார். அந்த எண்கள் தான் இராமனுசன் எண்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Saturday, October 8, 2011

சில சுவையான செய்திகள்




சனி நீராடு :
சனி நீராடு என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. சனி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.

Thursday, October 6, 2011

ஒன்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்





1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது.

2. ஆக்யங் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

Wednesday, October 5, 2011

இன்னுமா உடன்கட்டை...?







சின்னஞ்சிறு வயதில்
தன்னந்தனியாக
தவித்திருந்த என்னை
தத்தெடுத்தார்...
தவமென பாதுகாத்தார்....

Tuesday, October 4, 2011

திருக்குறள் – சில தெரியாத செய்திகள்






     திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் திருக்குறளைப் பற்றி சில தெரியாத செய்திகள் இதோ.....

1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.

Monday, October 3, 2011

யாருக்கு எத்தனை அறிவு?





எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர்கள் ஆறறிவு வரை உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளனர். மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு என்று வகை படுத்தியுள்ளனர். ஆனால் அனைவரும் ஆறாம் அறிவு பகுத்தறிவுடன் செயல்படுகின்றோமா? என்றால் அதன் விடை ???. சரி தெரிந்து கொள்வோம், அறிவு வகைப்பாட்டினை...

Saturday, September 10, 2011

கணிதத்தில் π ன் வரலாறு





கணிதம் என்பது ஒரு மாமருந்து, ஒரு தேன் விருந்து, பருக பருக திகட்டாதது. இந்த கணிதத்தில் சுவையின் சுவை சேர்க்க பல சுருக்கக் குறியீட்டைப் பயன்படுத்துகிறோம். கணிதத்தில் ஆழமாக வேரூன்றி தழைத்து நிற்கும்  π என்ற கணிதக் குறீயீட்டின் வரலாற்றினைப் பற்றி பார்ப்போம்.