பேரரசர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களை நாயக்கர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு வழங்கினர். இந்த நாயக்கர் முறையை பரந்து விரிந்த விஜயநகரப் பேரரசு ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைச் செலுத்தவும், வரி வசூல் செய்யவும், தேவையாயின் படை உதவி பெறவும் இம்முறையை பேரரசர்கள் பயன்படுத்தினர்.