Followers

Sunday, December 16, 2012

2012 இல் உலகம் அழியுமா?



       

       நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுலகை சந்திக்கிறேன் மிக முக்கியமான செய்தியோடு. ஆம் நண்பர்களே! 2012 இல் உலகம் அழியுமா? என்று அனைவராலும் ஆர்வத்துடனும் அதிர்ச்சியுடனும் பயத்துடனும் அலசி ஆராயப்படுகிறது.
    
     உண்மையில் 2012 டிசம்பர் 21 நாள் உலகம் அழியுமா? அகிலத்தின் ஆயுள் அவ்வளவுதானா? இல்லை, சூரிய குடும்பம் ஒன்று இருந்த தடமே தெரியாமல் போய்விடுமா? இப்படி கணக்கற்ற ஐய வினாக்கள் கண்முன்னே விடை தெரியாமல் நிற்கின்றன.

     இச்சமயத்தில் நாசாவிலிருந்து கசிந்து வந்த ஒரு செய்தி. “ பூமி திசை மாறுவதால்  நாளை (17.12.2012) சூரியன் தொடர்ந்து 36 மணி நேரம் (1.5 days) வெளிச்சமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு சில நாடுகளில் (1.5 days) இருட்டாக இருக்கும். இது நடந்தால் 21.12.2012 உலகம் அழிய தொடங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

     இச்செய்தி பலருக்கும் குறுந்தகவலாக வந்துக்கொண்டு இருக்கிறது. இச்செய்தி எமக்கு சிங்கபூரிலிருந்து வந்தது. இது உண்மையா? வதந்தியா? என்பது நாளை தெரிந்துவிடும். உண்மையில் உலகம் அழிவதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உள்ளன? என்பது பற்றி பாப்போம்.

     1) மாயன்களின் நாட்காட்டியில் 26000 வருடம் நிறைவடையும் நாள் டிசம்பர் 21 இல்  உலகம் அழிவுறும் என்று கூறப்பட்டுள்ளது. யாரோ சிலர் கண்டறிந்த நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு உலகம் அழிந்துவிடும் என்ற முடிவுக்கு எப்படி வருவது? என்ற ஐயம் ஏற்படலாம். ஐயம் தெளிவுறும் செய்தி.
     மாயன்கள் உண்மையில் வானியலில் வல்லவர்களாக இருந்தனர். “சிசென் இட்சா பிரமிடு மாயன்களால், 'குக்கிள்கான்' என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.  


                       இந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிறது. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது.
மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு, நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட்.
(*)இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365 நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு.
(*)இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
(*)இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.
     (*)இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போலஅமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் நாள், செப்டம்பர் 22ம் நாள் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. அப்பொழுது பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள்.
(*)இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் நாள், செப்டம்பர் 22ம் நாள் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். உலகில் உள்ள நாடுகளில் வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். அந்த நாட்கள்தான் மார்ச் 21ம் நாள், செப்டம்பர் 22ம் நாள். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பை எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார்கள்.

எனவே அவர்கள் கணித்ததில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது.
2)  விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் தமக்கென சுயமான ஒளியை கொண்டிருப்பதால் தொலை நோக்கி  கருவிகள் மூலம் அவற்றை காணமுடிகிறது. ஆனால் மனிதனால் கண்டு பிடிக்கபடாமலே இருட்டில்  கோடிக்கணக்கில் விண்வெளியில் சுற்றித்திரிகின்றன. இப்படிபட்டவற்றை கண்டு பிடிப்பதற்கென்றே மிகுந்த செலவில் நாசா ஒரு தொலைநோக்கியை கண்டுபிடித்தது. IRAS(infrared astronomical satelite) என்று பெயரிடப்பட்ட அந்த தொலைநோக்கியை செயற்கைக்கோள் மூலம் 1983 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பியது. 

இந்த தொலைநோக்கி கருவி infra red  என்னும் கதிர்களை செலுத்தி விண்ணில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத அனைத்தையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. நமது உடலில் xray செலுத்தப்பட்டு உடலை ஊடுருவி எலும்புகளை படம் பிடிப்பது போல இந்த தொலைநோக்கிகருவியும் infrared கதிர்களை செலுத்தி விண்வெளியை ஆராய்ந்து படமெடுக்கிறது. IRAS விண்வெளியை ஆராய்ந்த போது தற்செயலாக கோள் ஒன்றை கண்டுபிடித்து. அந்த கோளை மேலும் ஆராய்ந்த போது தான் அந்த கோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவது தெரியவந்தது. இதை பற்றி விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்தனர் முடிவில் விடை கிடைத்தது. சுமேரியர் என்னும் பழமை வாய்ந்த ஒரு இனத்தின் கல்வெட்டுகளிலும் கிடைத்தது.
    அந்த கோள்தான் planet x  என்று சில வருடங்களுக்கு முன் பெயரிடப்பட்டது
சுமேரியர்கள் niburu என்று பெயரிட்டு பூமிக்கு எமனாக வந்த கருஞ்சிவப்பு
கோள் ஆகும்.

இது பூமியை தாக்கும் நாள் டிசம்பர் 21 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3) சூரியன் பால்வெளி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம் 26000 ஆண்டுகள்ஆகும். நமது  சூரியன்  தனது  கோள்களுடன் இந்த  பால்வளி மண்டலத்தில்  ஒரு வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இது பால்வளிமண்டலதுக்கு  செங்குத்தான திசையில் சுற்றிவருகிறது.

நமது பூமிக்கு நடுவாக பூமத்தியரேகை இருப்பது போல  பால்வளிமண்டலதுக்கும், ஒரு நீளமான மத்திய ரேகை உண்டு அதை galactic equator என்று சொல்வார்கள்.

             சூரியன் தனது நீள்வட்ட பாதையில் செங்குத்தாக சுற்றும் போது பால்வளிமண்டலத்தின்மத்தியரேகையை ஒரு குறித்த  காலத்தில்  சந்திக்கிறது.        இப்படி சூரியன் பால்வளிமண்டலத்தின் மத்தியரேகையை சந்திக்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா....? 26,000 வருடங்கள்.       அதாவது சூரியன் பால்வளிமண்டலத்தை  ஒருமுறை சுற்றி வர எடுக்கும்  காலம் 26,000 வருடங்கள்.
      இம்முறை அந்த அச்சை நம் சூரியன் எப்போது சந்திக்கிறது தெரியுமா...?
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி.

சூரியன் பால்வளிமண்டலத்தை சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே கருமையான ஒரு பள்ளம் (dark rift ) போன்ற இடம்  இருப்பதையும்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.        அதன் ஈர்ப்பு விசையினால் சூரியக்குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

     ஏதாவது ஒரு காலத்தில் இப்படி சூரியன் மத்தியரேகையை தொடும்போது கருப்பு பள்ளத்தின் ஈர்ப்புவிசை அதை இழுக்கலாம். ஒரு முறை நடக்காவிட்டாலும் ஏதாவது 26,00 வருடங்களுக்கு ஒருமுறை அப்படிநடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

4பம்பரம் ஒன்றை சுழலவிட்டால் அது தன்னை தானே மிகவும் வேகமாக சுற்றும் அல்லவா. பம்பரம் சுற்றும் போது, பூமியில் தொட்டு கொண்டிருக்கும் கூரான பகுதி ஓரிடத்தில் நிற்க, மேல்பகுதி தலையை ஆட்டியபடி சுற்றும். அந்த தலையாட்டல் ஒரு கிடையான வட்டபாதயிலே இருக்கும்


      நாம் வாழும் பூமியும் 23.5 பாகையில்(degree) சாய்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பள்ளிபருவத்தில் படித்திருப்பீர்கள். பூமியும் பம்பரத்தை போல தலையாட்டலுடன் தான் சுற்றுகிறது. இந்த தலையாட்டலை precession என்கின்றனர்.

நமது பூமி பம்பரம் போல வேகமாக தலையாட்டாமல் மிக மிக மெதுவாக இந்த தலையாட்டலை செய்கிறது. பூமியின் வடபகுதி தனது அச்சில் ஒரு இடத்தில ஆரம்பித்து, வட்ட பாதையில் இந்த தலையாட்டலை செய்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு வருகிறது. இந்த தலையாட்டலுக்கு எடுக்கும் காலம் எவ்வளவு தெரியுமா 26000 வருடங்கள் என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா!


       
இந்த precession வில் ஆரம்பித்து 360 பாகையை பூர்த்தி செய்ய 26000 வருடங்கள் எடுக்கிறது.
     
இந்த precession அப்படி என்ன தான் முக்கியம் இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். மிக சரியாக 21.12.2012 அன்று பூமி தனது முழு சுற்றி முடித்து பூஜ்யத்துக்கு வருகிறது இதை polaris அல்லது pole star என்கிறார்கள்.

சரியாக கவனியுங்கள்...!
      21.12.2012
அன்று galactic equalator என்னும் பால்வளிமண்டலத்தின் மத்திய 

ரேகையை சூரியன் அடைகிறது. அதனால் பாலவளிமண்டலத்தின் மைய புள்ளியும், சூரியனும் மத்தியரேகை என்னும் நேர்கோட்டில் வருகின்றன. அத்துடன் நமது பூமியும் அதே நேர்கோட்டில் வருகிறது. அதோடு நிற்காமல் precession எனப்படும் தலையாட்டலை 26000 வருடங்களுக்கு பிறகு அடைகிறது. அதோடு dark rift என்னும் கரும்பள்ளத்தையும் நெருங்குகிறது.
     26000 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மிக அற்புதமான வானிலை நிகழ்வாக இதை கொள்ளலாம். 
    
5)  உலகம் அழிவது என்றால் அது இரண்டு விதத்தில் தான் அழிய முடியும்.

 1.
சூரியன் அழிவதால் ஒட்டுமொத்தமாக அதனுடன் சேர்ந்து உலகமும் அழிய வேண்டும் 
2.
உலகம் மட்டும் அழிய வேண்டும்.
    
இதில் இன்னொரு கேள்வியும் வருகிறது உலகம் அழிவதென்றால் மொத்தமாக உலகமே வெடித்து சிதறுமா? அல்லது உலகம் அப்படி இருக்க அதில் வாழும் உயரினங்கள் அழிந்து போகுமா?
      
முதலில் மேலே சொன்ன அந்த அற்புதமான நிகழ்வு நடைபெற்றால் எப்படி விளைவுகள் ஏற்படலாம் என்று அறிவியலாளர்கள் கூறுவதை பாப்போம்

      பால்வளிமண்டல மத்தியும், சூரியனும், பூமியும் இருக்கும் நேர் கொட்டு தன்மையினால் சூரியனுக்குள் ஏற்படும் காஸ்மிக் கவர்ச்சி விளைவுகளால் ஈர்ப்புவிசை மாற்றம் ஏற்பட்டு பூமியின் ஆச்சு தடம் மாற வாய்ப்புண்டு        அதாவது 23.5 பாகை சாய்வில் வடக்கு தெற்காக இருக்கும் பூமியின் ஆச்சு இடம் மாறி பூமியின் வடதுருவம் தென்துருவமாக மாறிவிடும். அதனால் இப்போது உள்ள துருவங்களின் பனி உருகி பூமியே தண்ணீரில் மூழ்கி விடும்.
     
அப்படி பூமியின் அச்சில் மாற்றம் ஏற்பட்டால் சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களுக்கோ, சூரியனுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது அதில் உள்ள உயிரினங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படும்.
     
பூமியின் சிறு தலையாடளுக்கே எவளவு சக்தி பார்த்தீர்களா.

    
மூன்று மத்திய ரேகைகளும் ஒரே நேர்கோட்டில் வரும் போது காஸ்மிக் கதிர்களின் அதிகபட்ச வீசுகளால், பூமியில் உள்ள அணைத்து உயிரினங்களும் இறந்துவிடும். அத்துடன் மின் காந்த விளைவுகள் உடைய கதிர்களின் தாக்கத்தால் பூமியில் உள்ள செயற்கைக்கோள், மின் சாதனங்கள் பழுதடைந்து எதுவுமே இயங்காமல் நின்று விடும். 


6) சூப்பர் வோல்கான்.
நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் எரிமலை போன்றவை அல்ல இவை. இவை எல்லாமே மலைகள் போல அல்லாமல், சாதாரணமாக நிலத்தின் கீழ் அடங்கியிருப்பவை. மொத்தமாகப் பூமியில் எட்டு சூப்பர் வோல்கான்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக 2012டிசம்பர் உலக அழிவுக்குக் காரணமாக அமையும் என்று நம்பப்படும் சூப்பர் வோல்கான், அமெரிக்காவில் உள்ள'யெல்லோ ஸ்டோன்' (Yellowstone) என்பதுதான்.



அமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன். 102 கிலோமீட்டர் நீளம், 82கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது. உண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு. இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர். 

                                                                             
 
கிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய நகரம் ஒன்றே பூமிக்குக் கீழே எரிந்தபடி இருக்கின்றது என்று சொல்லக் கூடியதாக உள்ளது. அது எப்போது வெடித்து வெளிவருமோ என்று தெரியாத நிலையில், அதனால் ஏற்படும் சுடு நீர் ஊற்றுகளைப் பார்க்க மக்கள் அங்கே கூடுகிறார்கள். இந்த யெல்லோ ஸ்டோன் மட்டும் வெடிக்குமானால்,ஒட்டுமொத்த அமெரிக்காவே சில நிமிடங்களில் காலியாகிவிடும். அது கடற்பகுதியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் உலகம் எங்குமே, சுனாமி மற்றும் பூகம்ப அழிவு எற்படும். அதுமட்டு மல்லாமல் இந்த வோல்கான் வெடிப்பதனால்,அதன் பாதிப்பின் தொடர்ச்சியாக, உலகின் மற்றைய ஏழு சூப்பர் வோல்கான்களும் வெடிக்கும் சாத்தியங்களும் உண்டு. இதனால் ஏற்படுவது ஒட்டுமொத்த உலக அழிவுதான். இதற்குச் சாத்தியம் எப்போது உண்டு என்று கேட்டால், இப்போதே உண்டு என்றுதான் பதில் வருகிறது. அநேகமாக இந்த யெல்லோ ஸ்டோன், டிசம்பர் 22 இல் வெடிக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. அதற்கான சீற்றங்களும் அங்கே காணப்படுகிறது என்பதும் உண்மைதான். இந்த யெல்லோ ஸ்டோன் வெடிப்பின் அழிவைத்தான் மாயன்கள் குறிப்பிட்டார்களோ என்று பலர் இப்போது சந்தேகப்படுகிறார்கள். காரணம், இதனால் ஏற்படும் அழிவுகள் நெருப்பினாலும், நீரினாலும் ஏற்படுவதாகவே இருக்கிறது. 


7) நாம் இப்போது சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதலுக்கு வரலாம். மேலே சொன்ன அழிவுகளை சிலர் மறுத்துப் பேசினாலும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆபத்து உண்டு என்றால்,அது இந்தச் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதல்கள்தான். இதற்குச் சாட்சியாக சமீபகாலங்களாக சூரியன் தனது வெப்பக் கதிர்வீச்சுகளை மிகவும் அதிகமாக்கியிருக்கிறது.


சூரியனின் இந்த கதிர்வீச்சுத் தாக்குதல் ஒரு புயல் போல பூமியைத் தாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித் தாக்கும்போது அதனுடன் சேர்ந்து உருவாகும் மின்காந்த அலைகளின் தாக்குதல்கள் பூமியின்இரண்டு துருவங்களுக்கு ஊடாக பூமியின் உள்நுழைந்துபூமியில் இருக்கும் அனைத்துவிதமான மின்னியல் சாதனங்களையும் தொழிற்பட முடியாமல் செய்துவிடும். அத்துடன் பூமி நினைக்க முடியாத அளவு வெப்பமாகி எல்லாமே அழியும் நிலைக்கு வந்துவிடும். ஆனால்இந்த சூரியக் கதிர்த் தாக்கத்தால் பூமி மொத்தமாக அழிவைச் சந்திக்கும். இந்த சூரியத் தாக்குதல் 2012 இல் நடப்பதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டு என்பதே பலரின் அனுமானமாக இப்போது இருக்கிறது. 
 
                                                                              

              நான் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாத எந்த ஒரு அழிவையும் நம்பப்போவதில்லை.  மொத்தத்தில் உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கேட்டால்ஆம், நூறு சதவீதம் உலகம் அழியக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அது 2012 டிசம்பர் 21 இல் அழியுமா என்று கேட்டால், அதற்குரிய சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் அழியாது என்பதற்கான சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நிபுரு கோள் (Planet X) அருகில் வந்திருந்தால் நிச்சயம் விஞ்ஞானிகள் இந்நேரம் கண்டறிந்து இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் மேற்காணும் காரணங்களால் அழிவுகள் ஏற்படின் அது ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படலாமே தவிர இவ்வழிவுகள்  100% வெற்றி பெரும் என்று கூறுவதற்கு இல்லை. ஆனால் ஒரு மிக பெரிய காண்பதற்கு அறிய விண்வெளியில் ஒரு அதிசியம் நடைபெறும் என்பது மட்டும் திண்ணம்.


என்னைக் கேட்டால் புத்தாண்டை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டை கொண்டாடுங்கள். மகிழ்ச்சி உண்டாகட்டும்.

No comments:

Post a Comment