தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம். அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள். இன்று தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது. தற்போதைய அரசு மறுபடியும் சித்திரையையே கொண்டு வந்துவிட்டது. இருப்பினும் நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும் நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது திணித்துவிட்டனர்.
தமிழ் மாதங்களாக மாற்றப்பட்ட ஆரிய மாதங்கள்
- சைத்திரா --- --- சித்திரை
- வைசாகி ------ வைகாசி
- மூலன் --- --- ஆனி
- உத்திராட ---- --- ஆடி
- அவிட்ட --- --- ஆவணி
- பூட்டாதி --- --- -- புரட்டாசி
- அசுவதி --- ---- ஐப்பசி
- கிருத்திகா ---- - கார்த்திகை
- மிருகசீரிசா ----- மார்கழி
- புனர்தை ---- - தை
- மகசி --- --- --- -- மாசி
- பல்குணா --- --- - பங்குனி
ஆனால் நாம் ஆரிய மாற்றத்திற்கு முன்பு வரை தமிழர்கள் தமிழர்களாகவே இருந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட தமிழ் மாதங்களை நோக்குக.
தமிழரின் பன்னிரு மாதங்கள்
- சுறவம் ( தை )
- கும்பம் ( மாசி )
- மீனம் ( பங்குனி )
- மேழம் ( சித்திரை )
- விடை ( வைகாசி )
- ஆடவை ( ஆனி )
- கடகம் ( ஆடி )
- மடங்கல் ( ஆவணி )
- கன்னி ( புரட்டாசி )
- துலை ( ஐப்பசி )
- நளி ( கார்த்திகை )
- சிலை ( மார்கழி )
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்
நல்லதொரு பகிர்வு நண்பா..
ReplyDeleteஇன்னும் தங்கள் கருத்துக்கான சான்றாதரங்களையும் தந்தால் இன்னும் நிறைவாக இருக்குமே..
வலையமைப்பு மிகவும்
ReplyDeleteஅழகாக உள்ளது நண்பா.
பயனுள்ள பகிர்வு. சான்றுகள் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சுறவம் (தை) ஆண்டின் முதல் மாதம் என்பது ஏற்புடையது அல்ல. தெளிவான சான்று இருந்தால் கொடுங்கள்.
ReplyDelete