ஒற்றை நிமிடத்தில் உயிர் பிரியும்
ஒற்றை நொடியிலும் உனைப் பிரியேன்
எந்தன் நெஞ்சின் நாளத் துடிப்பும்
உந்தன் பெயர்தான் காதல் துடிப்பாம்
பழகிய நாட்கள் பச்சை வெளிகள்
பாரத நாட்கள் நோகும் விழிகள்
வெங்காயத்தால் உன் கண்ணில் கண்ணீர்
வெறும் காயமல்ல என்நெஞ்சிலோ செந்நீர்
ஊசி முனையிலும் தவம புரிவேன்
ஒற்றை வார்த்தை என்னில் பேசுவதென்றால்....
சாலை விதிகளும் காணாமல் போகும்
ஒருமுறை எனை ஏறெடுத்துப் பார்ப்பதென்றால்....
ரோஜா மலரும் எத்தனை அழகு!
உன்னைப் பார்த்ததும்தான் எத்தனை ரசனை!
மனதை மயக்கிய மல்லிகை மலரே
மனதைத் தருவாயோ அழகிய இளந்தளிரே.....!
மனதை மயக்கிய மல்லிகை மலரே
ReplyDeleteமனதைத் தருவாயோ அழகிய இளந்தளிரே.....!
கவிதை அருமை...