Followers

Thursday, June 16, 2011

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்


      கணிதம் உலகை மட்டுமல்ல அனைவரின் உள்ளதையும் ஆளும். ஈடுபாடு ஒன்று போதும். ஈடுபட்டால் கணிதமே உலகமாகும்.

      தமிழர் என்ற வகையிலே நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அதில் கணிதத்தைப் பொறுத்த மட்டில்,


     வட்டத்தின் பரப்பளவினை முதலில் கண்டவர்கள் தமிழர்கள் தான் என்பதை முந்தையப் பதிவிலே கண்டோம். வட்டத்தின் பரப்பளவு மட்டுமல்ல சுற்றளவிலும் நாம்தான். 

கணக்கதிகாரப் பாடல் : 50

“ விட்ட மதனை விரைவா யிரட்டித்து
  மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
  ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
  தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்:

     விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு
                                        = 2r + 2r = 4r (விட்டம் = 2rr )
மட்டு நாண் மாதவனில் மாறியே = 4 ஆல் பெருக்கு
எட்டதனில் ஏற்றியே             = 8 ஆல் பெருக்கு
                       செப்பியடி = 20 ஆல் வகு

வட்டத்தின் சுற்றளவு       = ( 4r x 4 x 8 )  / 20
                                                             =  32 / 5 r
                                                             =  2 ( 16/5) r
                                                             = 2 π r

இங்கு  π = 16 / 5 = 3.2 ( இது ஓரளவுக்குத் துல்லியமான தோராயமே )
இன்று நாம் பயன்படுத்தும் வட்டத்தின் பரப்பு =  π r2 மற்றும் வட்டத்தின் சுற்றளவு =  π r என்ற சூத்திரங்களை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

கணிதத்தின் அரிய செய்திகள் தொடரும் ....



3 comments:

  1. அருமை..தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி... சமுத்ரசுகி அவர்களே.

    ReplyDelete
  3. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete